Wednesday, June 16, 2010

சந்தோஷமாகதான் இருக்கிறேன் !!!!

மழை பேயும்போது  மண் வாசனை தேடி 
ஏமாறும் நேரம் தவிர மற்ற நேரங்களில் 
சந்தோஷமாகதான் இருக்கிறேன் !!!! 

பச்சை புல்வெளியிலும் 
பசுமையான வயல் வரப்புகளிலும் 
நடந்து திரிந்தது நினைத்து பார்த்து 
சந்தோஷமாகதான் இருக்கிறேன் !!!! 

அம்மாவின் பாசமும்  அப்பாவின் நட்பும் 
துணைவியின் காதலும்.. என் குழந்தைகளின் மழலையும் 
அனுபவித்த காலங்களை நினைத்து 
சந்தோஷமாகதான் இருக்கிறேன் !!!! 

மக்களெல்லாம் ஊமையாய் நடந்து செல்ல 
அவர்களுடன் ஊமையாய் - நானும் 
மனசுக்குள்ளே என் தஞ்சை மக்களை  நினைத்து 
சந்தோஷமாகதான் இருக்கிறேன் !!!! 

எழுதிக்கொண்டே போகலாம் 
எழுத்துகளை உணர்வாய் பார்க்கும் 
என் மக்களை நினைக்கும்போதெல்லாம் 
சந்தோஷமாகதான் இருக்கிறேன் !!!! 

என்னை போல எத்தனை உள்ளங்கள் இங்கே வாடுகிறதோ
எனக்காவது தமிழே நீ இருக்கிறாய் என் புலம்பல் கேட்க 
அதுபோதும் நான் சந்தோசமாய்  இருக்க .. 

ஆம் 
நான் சந்தோஷமாகதான் இருக்கிறேன் !!!! 


--பழநிசாமி.தி

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.