Thursday, February 11, 2010

என்னை பற்றி......

இந்த பதிவுகள் அனைத்தும் எனக்காக .. எனக்கு நான் நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்ள.. அறிவுரை சொல்ல ரொம்ப ஆசை. ஆனால் அதுக்கு நான் தகுதியானவன் இல்லை.. இங்கே இருக்கிற நிறைய விஷயங்கள் நான் சொன்னது இல்லை.. படித்ததில் பிடித்தது..


ஆரம்பத்தில்.. எனக்கு blogs படிக்கவே பிடிக்காது.  காரணம் பெருசா ஒன்னும் இல்லை.. என்னவோ அவங்க சொந்த கதை எழுதி இருகிறத நாம படிக்கிற மாதிரி தோணும். ஆனால் சில blogger ரொம்ப நிறைய நல்ல விசயங்கள பத்தி பேசி இருந்தாங்க. இப்போ நான் ஒரு 10 blogs தொடற்சியா படிக்கிறேன்.
என்னை பற்றி சொல்லனும்ல.. 

சாதாரண மனுஷன் நான்.. அறிவாளியும் இல்ல முட்டாளும் இல்ல. 
சாதிக்க பிறந்தவன் எல்லாம் இல்லங்க.. சாதாரண வாழ்க்கை வாழறதுக்காக போராடுற மனுஷன்.மற்றபடி சந்தர்ப்பங்கள் மட்டுமே ஒரு மனுசனோட நல்ல/கெட்ட குணங்களை வெளிபடுத்தும்.. எனக்கு இதுவரை அமைந்த சந்தர்பங்களும், மக்களும், நண்பர்களும் ,நிகழ்வுகளும் அனைத்துமே நல்லவையாக இருந்துவிட்டது. என்னை நான் நல்லவனா கெட்டவனா என்று பரிட்சித்து பார்க்க எல்லாம் எனக்கு ஆசை இல்லை.. இனிமேலும்.. எனக்கு அமையும் அணைத்து சந்தர்பங்களும் நிகழ்வுகளும்.. நல்லவையாகவே இருக்க விரும்புகிறேன்..
Software Engineer. Working in singapore. Native place Thanjavur India..


--பழநிசாமி.தி

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.